சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-20351

  ‘வான்நின்று உலகம் வழங்கி வருதலான்’ குறள்-11
      எனவும்,
      ‘நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும்’
      ‘கற்பான் நூல் செய்தான்’
      ‘புணர்தரு செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும்’
      எனவும் உரகஈறாயும் வாள் பான் பாக்கு ஈறாயும் திரிதலும் கொள்க.

  உரைப்ப- உரைக்க- என இதற்கு ஏற்புழிப் பகரமும் ககரமும் வரும். இது மறைக்கண்,
      ‘கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி,
      கலி.கடவுள் வாழ்த்து
      என அல் ஈறாயும்,
      ‘கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான்’ குறள்-701
      என மகர ஐகார ஈறாயும் வருதலும், இன் ஈறு

  ‘நனவின் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ கலி.39
      என உம் ஈறாயும்,

  ‘அற்றால் அளவு அறிந் உண்க’ குறள்- 943

  என ஆல் ஈறாயும் திரிதலும் கொள்க. அகர ஈறும் இன்ஈறும் இயல்பு ஆதற்கும்,
உகரஈறும் வான்-பான்- பாக்கு ஈறும் உம்ஈறும் ஆல்ஈறும் அவற்றின் திரிபு ஆதற்கும்
மேல் உகர ஈற்றிற்கு உரைத்தாங்கு உரைக்க.

  இன்னும் அதனானே, ஓடிவந்தான்- விரைந்து போயினான்- எனவும்,

  ‘வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய்’
      எனவும்
      ‘செவ்வன் தெரிகிற்பான்’ நச்.எழு.பாயி