சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

358 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்துஒன்று ஆறுமுக் காலமும் முறைதரும்.’

‘பின்முன் கால்கடை யொடுவான் பானிடம்
அன்ன கிளவியும் அவற்றுஇயல் பினவே.’




நன்.343


மு.வீ.வி.39
 

வினையெச்சங்கட்குச் சிறப்பு முடிபு
 

247 அவற்றுள்,
முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும்
வினைமுதல் கொள்ளும் பிறவும்ஏற் கும்பிற.
 
 

இஃது இன்னும் வினையெச்சத்திற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது;
‘தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு, முடியும் முறையது வினையெச்சமே’ எனப்
பொதுவகையான் எய்துவித்ததனை ஈண்டுச் சிறப்பு வகையான் எய்துவிக்கின்றமையின்.

இ-ள்: முற்கூறிய பன்னிரண்டனுள் முதற்கண் நின்ற செய்து செய்யூ செய்யா செய்பு
என்னும் நான்கும் ஈற்றின் கண் நின்ற செய்வான் செய்யான் செய்பாக்கு என்னும்
மூன்றும் தம்மை நிகழ்த்தின கருத்தாவினது வினையைக் கொண்டு முடியும்.
பிறகருத்தாவினது வினையையும் உம்மையால் தன்மை நிகழ்த்தின கருத்தாவினது
வினையையும் கொண்டு முடியும், ஏனை ஐவகை எச்சங்களும் என்றவாறு.

  எ-டு: உண்டு வந்தான்- வந்து தோன்றினான்.
 

  ‘எண்ணித் துணிக கருமம்’
‘பரீஇ உயிர்செகுக்கும்’
‘ஐவரொடு சினைஇ நிலம் தலைக்கொண்ட’
குறள்-467
நாலடி.220
புறம்-2

எனவும்,