| மழைபெய்யியர் எழுந்தது, ‘பசலை உணீஇயர் வேண்டும்’ | குறுந்.27 | எனவும், | | மழைபெய்யியர் பலி கொடுத்தார், ‘கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணியியர் வெண்கோட்டு யானை பேஎர்க் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்ன’- |
நற்.10 | எனவும் ஏனை ஐந்தும் வினைமுதல் வினையும் பிறவினையும் கொண்டு முடிந்தவாறு காண்க. இனி மழைபெய்தற்கு முழங்கும்- மழைபெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்- எனவும், இறந்தபின் இளமை வாராது- கணவன் இனிது உண்டபின் காதலி முகம் மலர்ந்தது- எனவும், கடுத்தின்னாமுன் துவர்த்தது- மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது- எனவும், உரைத்தக்கால் உரை பல்கும்-; | | ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால், ஒளியிழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை’ | கலி-35 | எனவும், நல்வினைதான் உற்றக்கடை உதவும்- நல்வினை தான் உற்றக்கடைத் தீவினை வாரா- எனவும்; நல்வினை தான் உற்றவழி உதவும்- நல்வினைதான் உற்றவழித் தீவினை வாரா- எனவும், நல்வினைதான் உற்ற இடத்து உதவும்- நல்வினைதான் உற்ற இடத்துத் தீவினை வாரா- எனவும், இன்ன என்பதனால் தழீஇயவையும் வினைமுதல் வினையும் பிறவினையும் கொண்டு முடிதல் ஒன்றென முடித்தலால் கொள்க- |
|
|
|