உண்டு வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே வந்து தோன்றினான் என்பதும் அது. ‘எண்ணித் துணிக கருமம்’- எண்ணுபவனும் துணிபவனும் ஒருவனேயாவான். ‘பரீஇ உயிர்செகுக்கும் பாம்பு’- பரித்தலும் உயிர் செகுத்தலும் பாம்பின் தொழில்கள். ‘சினைஇ, நிலந்தலைக் கொண்ட ஈரைம்பதின்மர்’ சினக்கப்பட்டவரும் நிலந்தலைக் கொண்டவரும் நூற்றுவரே. இவை செய்து என் எச்சம் தன்வினைமுதல் வினையே கொண்டு முடிந்தமைக்கு எடுத்துக்காட்டு. உண்ணூ வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே. ‘நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம்’ புடைத்ததும் எழுந்ததும் யானையே, இவை செய்பு என்எச்சம் தன் வினைமுதல்வினை கொண்டாமைக்கு எடுத்துக்காட்டு. உண்ணா வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே; ‘நிலங்கிளையா நாணி நின்றோள்...........கடவுள் அன்னோள் நிலம் கிளைத்தவளும் நாணி நின்றவளும் அப்பரத்தையே. இவை செய்யா என் எச்சம் தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. உண்குபு வந்தான்- உண்டானும் வந்தானும் ஒருவனே, ‘தெரிபு தெரிபு குத்தின ஏறு’ தெரிதலும் குத்துதலும் ஏற்றின் தொழிலே. இவை செய்பு என் வாய்பாடு தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. |