சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

364 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘கொளக்கொளக் குறைபடாக் கூழுடைவியனகர்’

என்ற தொடரில் கொள்ளப்படுதலும் குறைபடாதிருத்தலும் கூழின்தொழில். இவை
செயஎன் எச்சம் தன்வினை முதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

மழை பெய்ய மரம் குழைத்தது- பெய்தல் மழையின் தொழில்; குழைத்தல் மரத்தின்
தொழில்.

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
                    நோக்கக் குழையும் விருந்து’

இத் தொடர்களில் மோத்தல் முகர்வான் தொழில், குழைதல் அனிச்சத்தின்
தொழில்; நோக்குதல் விருந்து புறந்தர வேண்டியவன் தொழில், குழைதல் விருந்தினனின்
தொழில், இவை செய என் எச்சம் பிறவினைமுதல்வினை கொண்டமைக்கு
எடுத்துக்காட்டு.

மழை பெய்யின் புகழ் பெறும்-பெய்தலும் புகழ் பெறுதலும் மழையின் தொழில்கள்.

‘தாம் வேண்டின் நல்குவர் காதலர்’

இத்தொடரில் வேண்டுதலும் நல்குதலும் காதலர் தொழில்கள். இவை செயின் என்
எச்சம் தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

மழை பெய்யின் குளம் நிரம்பும்-பெய்தல் மழையின் தொழில்; நிரம்புதல் குளத்தின்
தொழில்.

‘யாம் வேண்டின், கவ்வை எடுக்கும் இவ்வூர்’

வேண்டுதல் தலைவி முதலாயினார் தொழில்; கவ்வையெடுத்தல் ஊரவர் தொழில்.
இவை செயின் என் எச்சம் பிறவினை முதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

மழை பெய்யிய முழங்கும் பெய்தலும் முழங்குதலும் மழையின் தொழில்கள்.