சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

376 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வினையெச்சம்
தெரிநிலை குறிப்பு வினைகளைக் கொண்டு முடியுமாறு
 

249 வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆ கும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.
 

 

இது முன்னர்த் ‘தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு முடியும் முறையது’
என்றும், தன்வினை கொள்வன இவை என்றும், தன்வினையும் பிறவினையும் கொள்வன
இவை என்றும் பொதுவகையான் கூறினார்; இஃது அவ்வினை இவ்வினை என்பதூஉம்,
வினைக்குறிப்பொடு முடிவுழி இவ்வாறு முடியும் என்பதூஉம் கூறுகின்றது.

இ-ள்: வினையெச்ச வினைசொற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்
ஆராயத் தோன்றிய முடிபுச்சொல்லாம்; ஆண்டுக் குறிப்பு ஆக்க வினையொடு வரும்
என்றவாறு.

எ-டு: உழுது வந்தான்- மருந்து உண்டு நல்லன் ஆயினான் எனவரும் ‘வினையும்
குறிப்பும்’ எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஓதிப் பெற்ற பொருள்- ஓதி நல்ல
சாத்தன்- உழுது பயன் கொண்டு- உழுது அன்றி உண்ணான்- எனப் பெயரெச்ச
வினையெச்ச வினை வினைக்குறிப்புக்களும் முடிபு ஆதல் கொள்க. ‘நினையத் தோன்றிய’
என்றதனானே, உழுது வந்தவன்- உழுதுவருதல்- எனத் தொழிற் பெயரொடும் வினைப்
பெயரொடும் முடிதலும்,
 

  வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே’

குறுந்-84