வினையெச்சம் தெரிநிலைவினை குறிப்புவினை என்றஇரண்டனையும் கொண்டு முடியும்; வினைக்குறிப்பில் ஆக்கச்சொல் தொக்கோ விரிந்தோ இருத்தல்வேண்டும் என்பது. உழுது வந்தான்- வினையெச்சம் தெரிநிலை முற்றினைக் கொண்டது. உண்டு நல்லனாயினான்- ” குறிப்பு ” ஓதிப் பெற்ற பொருள்- ” தெரிநிலைப்பெயரெச்சம் ஓதி நல்ல சாத்தன்- ” குறிப்புப் உழுதுபயன்கொண்டு- ” தெரிநிலைவினையெச்சம் உழுதன்றி உண்ணான்- ” குறிப்பு உழுது வந்தவன்- வினையெச்சம் வினையால்அணையும் பெயரைக்கொண்டு முடிந்தது. உழுதுவருதல்- வினையெச்சம் தொழிற் பெயரைக் கொண்டு முடிந்தது. தலைவி தண்ணியள் ஆயினள் என்று கூறவேண்டிய இடத்தில் ‘தண்ணியள்’ எனவும், காகம் ‘சிரல்வாய ஆயின’ என்று கூறவேண்டிய இடத்தில் ‘சிரல்வாய’ எனவும் ஆக்கம் இன்றி வந்தன. |