என உளி ஐந்தாவதன் பொருட்டாயும் வரும். ‘கூறாய் தோழியான் வாழு மாறே’ என்புழி, வாழுமாற்றை என இரண்டாவது விரிதலின் அது மாறு அன்று; ஆறு என்பது. வாழும் நெறியை என இரண்டாவது விரிந்து நின்றதாம் என்க. இவ்வாறு வருவனவற்றைப் பகுதிப்பொருள் விகுதி என்பாரும் உளர். இன்னும் அதனானே, வினைஉருபு என்றாரேனும் உண்டவன்- உண்டவள்- நம்பி- நங்கை- என வரும் தொழிற்பெயரும் பெயர்ப்பெயரும் முதலியனவும் இவ்விடைச்சொல் பெற்று வருதல் கொள்க சாரியை பொருள் நிலைக்கு உதவுதலாவது எல்லாவற்றையும் என்புழி அற்றுச்சாரியை நிலைமொழிப் பொருள் இருதிணைக்கும் பொதுவாயினும் அஃறிணை என்பது படவருதலும், எல்லாநம்மையும் என்புழி நம்முச்சாரியை அப்பொருள் உயர்திணைத்தன்மைப்பன்மை என்பதுபட வருதலுமாம். ஒழிந்தனவும் தாம் சார்ந்து வரும் மொழிப் பொருட்கு உபகாரம் உடையவாமாறு ஓர்ந்து உணர்க. |