சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

394 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘தெரிநிலை தேற்றம் ஐயம்முற்று எண்சிறப்பு
எதிர்மறை எச்சம் வினாவிழைவு ஒழியிசை
பிரிப்புக் கழிவுஆக்கம் இன்னன இடைப்பொருள்’.

‘இடைச்சொல் தனியே இன்றி முன்பின்
வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை
வினைஒப்பு உருபுகளும் விளங்குதம் பொருளவும்
இசைநிறைப் பனவும் அசைநிறைப் பனவும்
குறிப்பும் எனஎண் கூற்றவை என்ப.’

‘பெயர்வினை இடத்துப் பிறப்பது இடைச்சொல்.’

‘வேற்றுமை வினைசா ரியைஒப் புருபுகள்
இசைநிறை அசைநிலை இருமூன்று திறத்தன.’
 


நன்.421





தொ.வி. 130

மு.வீ.ஒ.1



மு.வீ.ஒ.2
 
ஏகார இடைச்சொல்
 
252 தேற்றம் வினாஎண் பிரிநிலை எதிர்மறை
ஈற்றசை என ஆறு ஏகா ரம்மே.
 
 

இது தத்தம் குறிப்புப் பொருள் செய்வனவற்றுள் ஏகாரம் பெரும்பான்மை
பொருள்படுமாறும் சிறுபான்மை அசையாமாறும் கூறுகின்றது-

இ-ள்: உண்டேஎ மறுமை எனவரும் தெளிவுப்பொருண்மையும், நீயே கொண்டாய்
எனவரும் வினாப் பொருண்மையும் நிலனே நீரே தீயே வளியே எனவரும் எண்ணுப்
பொருண்மையும், அவருள் இவனே கள்வன் எனவரும் பிரிநிலைப் பொருண்மையும்,
யானே கொண்டேன் எனவரும் எதிர்மறைப் பொருண்மையும் என்னும் ஐவகைப்
பொருண்மைக்கண்ணும், ‘கடல்போல் தோன்றல காடுஇறந்தோரே’ (அகம்-1)
எனச்செய்யுள் இறுதியின் அசைநிலை ஆதற்கண்ணும் வருவன என அறுவகைப்படும்
ஏகார இடைச்சொல் என்றவாறு. 2