சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-2395

விளக்கம்
 

‘மாறுகோள் எச்சம்’ தொல்.275 என எதிர்மறைக் கண் வரும் ஏகாரத்தைத்
தொல்காப்பியனார் எழுத்துப்படலத்தில் கூறியதனை உட்கொண்டு இவர் எதிர்மறையும்
கொண்டார். இசைநிறைக்கண்வரும் ஏகாரம் சொல்லொடு இணைந்துவரும் ஏனைய
ஏகாரம் போலாது ‘ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ’ சீவக.652 என்றாற்போலத் தனிச்சீராய்
முன்னடுத்து வருதலின் அதனை இவ்வாசிரியர் இயல்பு வேறுபாடுநோக்கி
ஏனையவற்றுடன் இணையாது விடுத்தார். (278)

நீயே கொண்டார்- நீ கொண்டாயா எனவினா;
                    நிலனேநீரே- நிலனும் நீரும் என எண்;

அவருள், இவனேகள்வன்- இவனே என ஒரு கூட்டத்திலிருந்து,
ஒருவனைப்பிரித்தமையால் பிரிநிலை. பிரிநிலைக்குப்பிரிக்கப்பட்டாரைக் குறிக்கும் சொல்
முன் வருதல் இன்றியமையாதது; யானே கொண்டேன்- யான்கொண்டிலேன் என
எதிர்மறை; உண்டேஎ மறுமை- தேற்றப்பொருட்கண் அளபெடுத்தது. (254)
 

ஒத்த நூற்பாக்கள்
 

‘தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே.’

‘தேற்றம் வினாஎண் எதிர்மறையும் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகாரம் எண்’.

‘பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை எனஆறு ஏகா ரம்மே.’

‘ஏ-என் இடைச்சொல் ஈற்றசை தேற்றம் எண்
வினாப்பிரி நிலைஇசை நிறை என ஆறே.’
 


தொல்.சொல்.257

 நே.சொல்.422


நன்.422



தொ.வி.131