சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

396 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘எண்ணே பிரிநிலை ஈற்றசை தேற்றம்
வினாவோ ரைந்தும் விளக்கும்ஏ காரம்’,


மு.வீ.ஒ.7
 

ஓகார இடைச்சொல்
 

253 ஒழியிசை வினா- சிறப்பு எதிர்மறை தெரிநிலை
கழிவு பிரிப்பு அசைநிலை எனஎட்டு ஓவே.

 

இதுவும் அது.

இ-ள்: ஒழியிசைமுதலாகப் பிரிநிலை ஈறாகக் கிடந்த பொருள்நிலையும்
அசைநிலையும் எனச் சொல்லப்பட்ட எட்டு வகையினையும்பற்றி நிகழும் ஓகார
இடைச்சொல் என்றவாறு.

உ-ம் கொளலோ கொண்டான் என்பது கொண்டு உய்யப் போகல்ஆயினாள்
அல்லன் என்பது முதலிய ஒழியிசை நோக்கி நிற்றலின் ஒழியிசை ஓகாரம்.

சாத்தன் உண்டானோ என்பது வினாஓகாரம்.

ஓஒ பெரியன் என்பது பெருமைமிகுதி உணர்த்தலின் சிறப்பு ஓகாரம்;
 

  ‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ களவழி. 36
 

என்பதும் அது.

யானோ கொள்வேன் என்பது கொள்ளேன் என்னும் எதிர்மறை குறித்து நிற்றலின்
எதிர்மறை ஓகாரம்.
 

  ‘திருமகளோ அல்லள் அரமகளோ அல்லள் இவள்
யாவள்’
 
 
என்பது தெரிதற்கண் வருதலின் தெரிநிலை ஓகாரம்.
 
  ‘நைதல் இன்றி நல்லறம் செய்கின்றிலார்
ஓஒ தமக்கோர் உறுதி உணராரே’
 
என்பது கழிந்ததற்கு இரங்கலின்கழிவு ஓகாரம்;