இழிவு சிறப்பு என்பதற்கு இழிவினுள் சிறந்த இழிவு என்று பொருள் கொள்ளின் இவ்வூர்ப் பூசையும் புலால் என்னாது என்பது இழிவுசிறப்பாம். உம்மைப் பொருளைப் பூசைக்குக் கொண்டாலும் இழிவுசிறப்பாம். உம்மைப் பொருளை ஊருக்குக் கொண்டால் உயர்வு சிறப்பாகும். இறந்தது தழீஇயதற்கு இறந்தகால வினையும் எதிரது தழீஇயதற்கு எதிர்காலவினையும் தந்து காட்டுதலே தெளிவானது. உம்மை ‘இயல்பு’ என்ற பண்பு அடுத்து ஆரைக் கிளவி முன்வந்தது. ஆக்கம்- அமைத்துக் கோடல் ஆதலின், வழுவமைதி பற்றிவரும் உம்மை ஆக்க உம்மையாம். உரைச் செய்தி பெரும்பாலும் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியதே. |