‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும்’ என்புழி மறப்பினுடம் என்னும் உம்மை மறக்கலாகாது என்னும் எதிர்மறைப் பொருள்தந்து நிற்றலின், இன்னோரன்னவையே எதிர்மறை உம்மையாம் என்பது. ‘ஒன்று இரப்பான்போல் இளிவந்தும் சொல்லும்’ என்பதன்கண் வருவனவற்றை ஐய உம்மை என்றார். ‘திருமகளும் அல்லள் அரமகளும் அல்லள்’ என்பதனொடு ‘மதுகையும் உடையன் அடக்கமும் உடையன் வண்மையும் உடையன்’ என்பதன்கண் வேற்றுமை இன்மையானும், மதுகை உடையவனோ அடக்கம் உடையவனோ வண்மை உடையவனோ என ஐயப்பொருள் தாராமையானும், |