சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-7,8407

இப்பொழுது பத்துக்கொடு என உம்மை இன்றியும் பொருள் பெறப்படும். பத்தும்கொடு
பிறவும் கொடு என்பது கருத்தாயின் அஃது எச்ச உம்மை ஆதலின் ஈண்டைக்கு
எய்தாதது. அதனால் அது பொருத்தம் இன்று என்க.

எல்லாரும் வந்திலர்- எல்லாம் வந்தில- என்புழிச் சிலர் வந்தார்- சில வந்தன-
எனச்சிறுபான்மை எச்சம் குறித்து நிற்றலின், உம்மை இடைச்சொல்லே அன்றி எஞ்சாப்
பொருள ஆகிய பொருட்பெயர்களும் இவ்விதி பெறுதல் அதிகாரப் புறனடையால்
கொள்க. 7
 

விளக்கம்
 

முற்றும்மை எச்சப்பொருட்கண் வரும் வழு, வழக்குப் பயிற்சி உண்மை
காரணமாக அமைக்கப் படுகிறது.

இவ்வுரை சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்ற இருவர் விளக்கமும்
கொண்டுள்ளது.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.’

தொல்.சொல். 285

  முழுதும்

 நன்.426


எச்சவும்மைக்கண் சொல்லுமாறு
 

258. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.
 

இஃது எச்ச உம்மைக்கண் சொல்லுதல் வகைமை கூறுகின்றது.