சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

408 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: எச்ச உம்மையால் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மைஇல் சொல்
ஆயின், அவ்வும்மைஇல் சொல்லை அவ்வும்மைத் தொடருக்குபின் சொல்லாது முன்
சொல்லுக என்றவாறு.

வரலாறு: சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் எனவரும்.
 

  ‘அடகுபுலால் பாகு பாளிதமும் உண்ணான்,
கடல்போலும் கல்வி யவன்’

என்பதும் அது. கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின்
முற்கூறியதனை விலக்குவது போன்று பொருள் கொள்ளாமை கண்டுகொள்க. உம்மை
அடாதே தானே நிற்றலின் செஞ்சொல் என்றார். செஞ்சொல் ஆயின் முற்படக்கிளக்க
எனவே எஞ்சுபொருட்கிளவி உம்மையொடுவரின் பிற்படக்கிளக்க என்றாவாறாம். 8
 

விளக்கம்
 

சாத்தன் வந்தான்- உம்மை அடாத சொற்றொடர். இதனை முன்னர்க் கூறிக் கொற்றனும் வந்தான் என்ற தொடரைப் பின்னர்க் கூறுக. ஈண்டு முன்பின் என்பன காலமுன் காலபின் என்பதனை அறிக.

அடகு புலால் பாகு பாளிதமும் என்ற தொடரில் உம்மை அடாத சொற்கள் முன்னரும் உம்மை அடுத்த சொல் இறுதியும் வந்தமை காண்க.

கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனின் இரண்டு தொடர்க்கண்ணும்
பொருள் இயைபு ஏற்படாமை காண்க. உரை நச்சினார்க்கினியர் உரையே. (286)
 

ஒத்த நூற்பாக்கள்
 

  முழுதும்

தொல்.சொல்.284

  ‘செவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை.’

நன். 427