சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

414 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

வரலாறு: உண்டும் தின்றும் பாடியும் வத்தான் எனவும்,

உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும்,
 

  ‘மண்டிலம் மழுங்க மலைநிறம் கிளர
வண்டினம் மலர்பரந்து ஊத மிசைய
கண்டல் கானம் குருகுஇனம் ஆர்ப்ப’

 

எனவும் வரும்.

பிறவும் வினையொடு வருவன உளவேல் காண்க. உம்மையான், பெயரொடு
வருதலே பெரும்பான்மை என்பதாம். ‘ஏற்பன’ என்றதனானே, முற்றும்
பெயரெச்சமும்பற்றி வாரா எனவும், வினையெச்சத்தொடும் ஏற்பனவற்றொடு அல்லது
வாரா எனவும். ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை எனவும் கொள்க.

‘சாத்தன் வந்தான் கொற்றன் வந்தான் வேடன் வந்தான் மூவரும் வந்தமையான்
கலியாணம் பொலிந்தது’ எனச் செவ்வெண் தொகை பெற்று வந்ததால் எனின், அவை
எழுவாயும் பயனிலையுமாய் அமைந்து மாறுதலின் எண்ணப்படாமையானும், மூவரும்
என்பது சாத்தன் முதலாயினோர் தொகை ஆகலானும் பொருந்தாது என்க.
 

விளக்கம்:
 

சாத்தன் வந்தான் முதலிய மூன்றும் தனித்தனி எழுவாய்த்தொடர்கள். மூவரும்
என்பது சாத்தன் கொற்றன் வேடன் என்ற பெயர்களின் தொகை; வினையின்தொகை
அன்று; ஆதலின், வினைச்சொற்கள் எண்ணிடைச் சொல்லான் எண்ணப்பட்டமைக்கு
‘சாத்தன்..........பொலிந்தது’ என்பது எடுத்துக்காட்டு ஆகாது. உரை சேனாவரையர்
உரையே.