சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

416 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்


 
   ‘அதுமன் கொண்கன் தேரே’
 
என்புழி, மன் அசைநிலையாய் நின்றது.
 
  ‘மன்னும் மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி’

சிலப்-7-2

என மிகுதி குறித்தும்,
 
  ‘மன்னா உலகத்து மன்னிய புரைமே’

கலி.54

என நிலைபேறு குறித்தும் வரும் என்பாரும் உளராலோ எனின், அவை வினைச்சொல்லாய் நிற்றலின் ஈண்டைக்கு எய்தா என்க. 13
 

விளக்கம்
 

பொருள் நிலையையும் அசைநிலையையும் தனித்தனியே இடையே கலவாது கூறுதல் இவர் இயல்பாம்.

மிகுதிப் பொருளினும் நிலைபேற்றுப் பொருளினும் வரும் மன் என்பது
வினைச்சொல்லே, இவ்விடைச்சொல் அன்று என்று கூறி நன்னூலாரை மறுத்துள்ளார்;
தொல்காப்பியனார் கூறாத அசைநிலையையும் உடன்கூறி, நன்னூலார் கூறிய மிகுதி
நிலைபேறு என்ற பொருள்களை மறுத்துள்ளார்.


ஒத்த நூற்பாக்கள்
 

  ‘கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவிஎன்று
அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே.’

தொல்.சொல்.252


 
  ‘காண்டகுமன் ஆக்கம் கழிவே ஒழியிசை.’

நே.சொல்.53


 
  ‘மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்.’

நன்.432


 
  ‘ஆக்கம் ஒழியிசை கழிவையும் தரும்மன்.’

மு.வீ.ஒ.2