சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-14417

‘தில்’ இடைச்சொல்
 

264. விழைவே காலம் ஒழியிசை தில்லே.

 

    

இது தில் என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: விழைவு குறித்து நிற்பதும் காலம் குறித்து நிற்பதும் ஆண்டு ஒழிந்து நின்ற
சொற்பொருள் குறித்து நிற்றலும் என மூன்று வகையினை உடைத்து தில் என்னும்
இடைச்சொல் என்றவாறு.
 

  வரலாறு:
‘வார்ந்துஇலங்குவைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே’

குறுந்.14


என்புழிப் பெறுதற்கண் உளதாகிய விருப்பம் குறித்துநின்றது.
 
  ‘பெற்றாங்கு அறிகதில் அம்மஇவ் வூரே’

குறுந்.14


என்புழிப் பெற்ற காலத்து அறிக எனக் காலம் குறித்து நின்றது.
 
  ‘வருகதில் அம்ம எம் சேரி சேர’

அகம்.276


என்புழி, வந்தக்கால் இன்னது செய்வல் என்னும் ஒழியிசைப்பொருள் குறித்து நின்றது.

இடம் வரையறுத்து ஓதாமையின் மூன்று இடத்தும் வருதல் எய்திற்றேனும்,
ஏற்புழிக் கோடலான் விழைவின் என் வருவழித் தன்மைக்கண் அல்லது வாராது எனக்
கொள்க. என்னை?
 

  ‘விழைவிள் தில்லை தன்இடத்து இயலும்’

(தொல்.சொல்.260)


என்ப ஆகலின்.