விளக்கம் |
| உரை முழுதும் சேனாவரையர் உரைத்தனவே. | 253 |
விழைவுப் பொருள் தன்மைக்கே உரித்து எனவே, ஏனைய இரு பொருளும் மூவிடங்களுக்கும் உரிய என்பதாம். |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன்று அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே.’ | தொல்.சொல்.253 |
| ‘தில்லை பருவம் விழைவு, நயனில் ஒழியிசையும் நாட்டு.’ | நே. சொல்.53 |
| ‘விழைவே காலம் ஒழியிசை தில்லே.’ | நன்.431; |
‘கொன்’ இடைச்சொல்
|
265. | அச்சம் பயம்இலி காலம் பெருமை என்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. | |
இதுகொன் என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள்: அச்சப் பொருள் குறிப்பதும் பயமின்மைப் பொருள் குறிப்பதும் காலப் பொருள் குறிப்பதும் பெருமைப் பொருள் குறிப்பதும் என்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம் கொன் என்னும் இடைச்சொல் என்றவாறு. |
| வரலாறு: ‘கொன்முனை இரவுஊர் போல’ | குறுந்.91 |
என்புழி அஞ்சி வாழும் ஊர் என அச்சமும், |
| ‘கொன்னே கழிந்தன்று இளமையும்’ | நாலடி.55 |
என்புழிப் பயம் இன்றிக் கழிந்தது எனப் பயம்இன்மையும். |