சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

418 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

  உரை முழுதும் சேனாவரையர் உரைத்தனவே.

253


விழைவுப் பொருள் தன்மைக்கே உரித்து எனவே, ஏனைய இரு பொருளும்
மூவிடங்களுக்கும் உரிய என்பதாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன்று
அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே.’

தொல்.சொல்.253

  ‘தில்லை பருவம் விழைவு,
நயனில் ஒழியிசையும் நாட்டு.’

நே. சொல்.53

  ‘விழைவே காலம் ஒழியிசை தில்லே.’

நன்.431;


‘கொன்’ இடைச்சொல்
 

265. அச்சம் பயம்இலி காலம் பெருமை என்று
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.

 

இதுகொன் என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது.

இ-ள்: அச்சப் பொருள் குறிப்பதும் பயமின்மைப் பொருள் குறிப்பதும் காலப் பொருள் குறிப்பதும் பெருமைப் பொருள் குறிப்பதும் என்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம் கொன் என்னும் இடைச்சொல் என்றவாறு.
 

  வரலாறு: ‘கொன்முனை இரவுஊர் போல’

குறுந்.91

என்புழி அஞ்சி வாழும் ஊர் என அச்சமும்,
 
  ‘கொன்னே கழிந்தன்று இளமையும்’

நாலடி.55

என்புழிப் பயம் இன்றிக் கழிந்தது எனப் பயம்இன்மையும்.