| ‘கொன்வரல் வாடை’ | |
என்புழிக் காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலை உடைய வாடை எனக்காலமும், |
| ‘கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ்சலமே’ | குறுந். 138 |
என்புழிப் பேரூர் துஞ்சினும் எனப் பெருமையும் குறித்து நின்றவாறு காண்க. |
விளக்கம் |
உரை சேனாவரையர் உரையே- (254) நன்னூலார் இவ்விடைச்சொல்லைக் குறிப்பிடவில்லை. |
ஒத்த நூற்பா |
| முழுதும் | தொல்.சொல். 254,மு.வீ.ஒ.4 |
| ‘,., .......... ......... ...... ....கொன் ஆண்டுஅறிகா லம்பெருமை அச்சமே- நீண்ட பயனின்மை’ | நே.சொல்.53 |
‘மற்று’ இடைச்சொல்
|
266. | மற்றுஎன் கிளவி வினைமாற்று அசைநிலை. | |
இது மற்று என்பது பொருள்படுமாறும் அசைநிலை ஆமாறும் கூறுகின்றது. இ-ள்: மற்று என்னும் இடைச்சொல் முன் சொல்கின்றது. ஒழிய இனி அது வேறு என்னும் பொருண்மை குறித்தலும் அசைநிலை ஆதலும் உடைத்து என்றவாறு. |
| வரலாறு: ‘இனி மற்றொன்று உரை’ | |
எனத் தொழிலும், |
| ‘மற்று அறிவாம் நல்வினை யாம் இளையம்’ | நாலடி. 19 |
எனக் காலமும், |