சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

42 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கண்ணும் அவர் செய்யுட் கண்ணும் வாராமையின் அமைக்கப்படா எனச் சேனாவரையர்
மறுத்தமையான் அது வழக்கு நெறி ஆகாமை அறிக.
 

அமைதி
 

இன்றும் குழூஉக்குறி சான்றோர் வழக்கினுள்ளும் காணப்படுதல் கண்கூடு.
காலவேறுபட்டான் எல்லோருக்கும் விளங்காது போகலாம் என்று சான்றோர்
செய்யுட்கண் அவற்றைக்கையாளாது விடுத்திருக்கலாம். குழூஉக்குறி சான்றோர்
செய்யுட்கண்ணும் அருகி வருதல் கலம்பகம் முதலியவற்றில் காணப்படுவது ஒன்றாம்.
தமக்கு விருப்பமான இடத்தில் ‘சேனாவரையர் மறுத்தார்’ என்று அவர் கூற்றினைக்
காட்டி இவ்வாசிரியர் கருதை முனிவர் மறுக்க முற்படுகிறார்! நன்னூல் விருத்தியுள்
இதுபற்றிய குறிப்பு எதுவும் காணப்படாமை பெருவியப்பைத் தருகிறது.
கள்ளி னைக்களியர் ‘எழுதாததொர் திருமந்திரம்’ என்றுகுறிப்பிடுவது மதுரைக்கலம்
பகத்து 25ஆம் செய்யுளான் அறிக.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே.
வழக்கும் தகுதியுமாய் வந்தொழுகும் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு.’
முழுதும் நன்னூல்.
‘செந்தமிழ் வழக்குரை செப்புங் காலை
இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும்மூ வகைத்தாம் இயல்பு
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோடு இருமூன்று ஆகும்.’
‘இயல்பும் தகுதியும் என வழக்கு இருமைய.’

தொல்.சொல். 17

நே. சொல். 11
267




தொ.வி. 194
மு.வீ.பெ. 14