சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-10-1143

 


 
‘இயல்பு மரூஇலக் கணமுடை யனஇலக்
கணப்போலி என்மனார் கற்றுணர்ந் தோரே’.
‘தகுதி குழூக்குறி மங்கலம் இடக்கர்
அடக்கல் என்மனார் அறிந்திசி னோரே’. ”

மு.வீ.பெ. 15

16
 

செய்யுள்
 

169பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல
சொல்லால் பொருட்குஇடன் ஆக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வது செய்யுள்.
 

 

இதுமேல் செய்யுள் என்றதன் இயல்பு கூறுகின்றது.

இ-ள்: நரம்பு முதலிய தாதுக்களான் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட
உடம்புபோல,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
 

 அனைத்தே செய்யுள் ஈட்டச்சொல்லே’ தொல். சொல். 397
 
என்ப ஆகலின், அந்நால்வகைச் சொற்களான் பொருட்கு இடனாக அறிவினால்
கற்றுவல்லோர் அலங்காரம் பெறச் செய்வது செய்யுளாம் என்றவாறு.

சொல்லும் எழுத்தான் பெறப்படுதலின், எழுத்து சொல் பொருள் அணி என்ற
நான்கனானும் இயல்வது செய்யுள் ஆயிற்று. ஆகவே, இவ்வைந்தும் தம்முள்
ஒன்றைஒன்று இன்றியமையா என்பதூஉம் பெற்றாம்.

வரலாறு:
                    வருங்குன்றம் ஒன்றுஉரித் தோன்தில்லை அம்பல வன்மலையத்து
                    இருங்குன்ற வாணர் இளங்கொடியேஇடர் எய்தல்எம்மூர்ப்
                    பருங்குன்ற மாளிகை நுண்களபத்துஒளி பாயநும்மூர்க்