சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

44 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம்ஏய்க்கும் கனங்குழையே எனவரும். திருக்கோவை- 20

விளக்கம்
 

மேல் செய்யுள் என்றது- 160 ஆம் நூற்பாவினை.
நரம்பு முதலிய தாது - தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேதநீர்
என்பன.

  ஒத்த நூற்பாக்கள்:
 

 முழுதும் -
‘கற்று வல்லோர் கற்பித்து உரைப்பது
செய்யுள் என்மனார் தெளிந்திசி னோரே.’
நன். 268

மு.வீ.பெ. 1
 

குறிப்பு வெளிப்படை
 

170ஆகுபெயர் வினைக்குறிப்பு அன்மொழி விகாரம்
முதல்தொகை தகுதி குறிப்போடு இன்னவும்
குறிப்பின் தருமொழி அல்லன வெளிப்படை.
 

 

இது மேல் வெளிப்படை குறிப்பு என்பன இவை என்று அவற்றின் இயல்பு
கூறுகின்றது.

இ-ள்: ஆகுபெயர் முதலியனவும் இவைபோல்வன பிறவும் ஆகிய சொற்கள், சொல்
மாத்திரத்தான் பொருளை விளக்காது சொல்லொடு கூடிய குறிப்பான் பொருளை
விளக்கும் சொற்களாம். இத்தன்மையன அன்றி வரும் எல்லாச் சொற்களும்
சொல்மாத்திரத்தான் பொருளை விளக்கும் வெளிப்படைச் சொற்களாம் என்றவாறு.

எ-டு: கடுத்தின்றான்- புளித்தின்றான்- என ஆகுபெயர் அவற்றது காய் ஆகிய
பிறிதுபொருளையும், கரியன் செய்யன் என வினைக்குறிப்புமுற்று அவற்றது வினையாகிய
இன்னனாய் இருந்தான் என்பதனையும்,