| வரலாறு: ‘முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்’ | புறம்.73 |
என்புழி, அரசுகொடுத்தல் எளிது என எளிமைப் பொருள் உணர்த்தியவாறு காண்க. |
ஒத்த நூற்பா |
| முழுதும் | தொல்.சொல். 266,மு.வீ.ஒ.13 |
இசைநிறை இடைச்சொற்கள்
|
272. | ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே | |
இஃது இசைநிறை ஆமாறு கூறுகின்றது. இ-ள்: ஒடு என்பதும் தெய்ய என்பதும் இசைநிறை இடைச்சொல்லாம் என்றவாறு. |
| வரலாறு: ‘முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுள’ | குறுந்.155 |
எனவும், |
| சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ | |
எனவும் வரும். |
விளக்கம் |
போதொடு என்பது போது என்ற பொருளே தருவது. |
ஒத்த நூற்பா |
| முழுதும் | நன்.436 |
‘அந்தில்’, ‘ஆங்க’- இடைச்சொற்கள்
|
273. | அந்தில் ஆங்க அசைநிலை அவற்றுள் அந்தில் இடப்பொருட்டு ஆகலும் உரித்தே. | |
இஃது அசைநிலை ஆமாறும் பொருள்படுமாறும் கூறுகின்றது. |