இ-ள்: அந்திலும் ஆங்கவும் ஆகிய இரண்டு இடைச் சொல்லும் அசைநிலையாம்: அவற்றுள் அந்தில் இடப்பொருளைக் குறித்து நிற்றற்கும் உரித்து என்றவாறு. |
| வரலாறு; ‘அந்தில் கச்சினன் கழலினன்’ | அகம்.76 |
|
| ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக் கேள்வனை விடுத்துப் போகி யோளே’ | |
எனவும், |
| ‘வருமே சேயிழை அந்தில் கொழுநற் காணிய’ | குறுந். 293 |
எனவும் வரும். அசைநிலை எனவும் இடம் எனவும் பொதுப் படக் கூறினாரேனும், ஏற்புழிக் கோடலான் ஆங்க அசைநிலை ஆதல் கட்டுரைக்கண் எனவும், அந்தில் ஆங்கு என்னும் இடப்பொருள் குறித்து வரும் எனவும் கொள்க. 23 |
விளக்கம் |
தொல்காப்பியனார் ஆங்க உரையசை எனவும், அந்தில் ஆங்கு என்ற பொருளிலும் அசைநிலையாகவும் வரும் எனவும் குறிப்பிட்டதை உட்கொண்டு, இவ்வாசிரியர் நூற்பாயாத்தார். நன்னூலார் அந்தில், ஆங்க-என்ற இரண்டும் அசைநிலையாகவும் இடப் பொருளாகவும் வரும் என்றார். |
ஒத்த நூற்பா |
| ‘அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று ஆயிரண் டாகும் இயற்கைத்து என்ப.’ | தொல்.சொல்.267 |
|
| ‘ஆங்க உரையசை’ | தொல். சொல். 277, மு.வீ.ஒ.21 |
|
| ‘அந்தில்ஆங்கு அசைநிலை இடப்பொரு ளவ்வே.’ | நன்.437,மு.வீ.ஒ.14 |