சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

428 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கண்பனி ஆன்றிக என்றி தோழி’
 
எனவும்- இகவும்,
 
  ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’

குறுந். 2

என- மோவும்,
 
  ‘உரைமதி வாழியோ வலவ’
‘சென்மதி பெருமநிற் றகைக்குநர் யாரே’

அகம்.46

என- மதியும்,
 
  செலீஇயர் அத்தை நின்வெகுளி’

புறம்.6

என- அத்தையும்,
 
  ‘வேய்நரல் விடர்அகம் நீஒன்று பாடித்தை’

கலி.40

என- இத்தையும்,
 
  ‘காணிய வாழிய மலைச்சாரல்’
 
என- வாழியவும்,
 
  ‘சிறிதுதவிர்ந்து ஈக மாளநின்-
பரிசிலர் உய்ம்மார்’

 
என- மாளவும்,
 
  ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’
 
என- ஈகாரமும்,
 
  ‘நீயே, செய்வினை மருங்கின் செலவு அயர்ந்து யாழநின்
கைபுனை வல்வில் நாண்உளர் தீயே’

கலி. 7

என- யாழவும்,

முன்னிலை அசைநிலையாய் வந்தவாறு காண்க. 26


 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘மியாஇக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.’

தொல்.சொல்.274,

  முழுதும்

நன்.440


 
  ‘இத்தை அத்தை யாழஇக மதிமாளஆர்
‘மோமியா வாழிய முன்னிலைஅசை பத்தே.’

தொ.வி.137