சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-27431

  ‘சாம்துயர் எவ்வம் உழந்துறு தண்புனம்
நீந்தியோர் மாண்புஇனிது ஒன்றலின் நீதான்’

 

என-தானும்,
 

  ‘அறிவார் யார் அஃது இறுவுழி இறுகஎன’

 

என- எனவும்,
 

  ‘ஈங்குஆ யினவால் என்றிசின் யானே’

நற்.55

என-ஆலும்,
 

  ‘குரைபுனல் கன்னிகொண்டு இழிந்தது என்பவே’

சீவக.39

என-என்பவும் அசைநிலையாய் வந்தவாறு காண்க.
 

  இனிப் ‘பிறவும்’ என்றதனானே,
‘தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே’

ஐங்.73

என-இசினும்,
 

  ‘தேனைமாரி அன்னான்’
‘ஊனைஉண்டு அருகும்’

சீவக.161
 

என- ஐகாரமும்,
 

  ‘நெருப்புஅழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட்டு எவ்வநோய் ஆக்கும்’

நாலடி.129

எனப்போல்வதும் சிறுபான்மை அசைநிலை ஆதலும்,

ஒருவன் யான் இன்னேன் என்றானும் நீ இன்னை என்றாலும் அவன் இன்னன்
என்றானும் கூறியவழிக் கேட்டான் ‘ஆகஆக’-ஆகல் ஆகல் என்னும்; இவை
உடன்படாமைக் கண்ணும், ஆதரம் இல்வழியும், ஒருவன் ஒன்று உரைப்பக் கேட்டான்
‘என்பது என்பது’ என்னும்; அதுநன்கு உரைத்தற் கண்ணும், பிறாண்டும் தனித்து
நில்லாது இரட்டித்துப் பிரிவு இல் அசைநிலை ஆதலும் கொள்க. இன்னும் அதனானே,
போலும்-போல்வது- என்பன உரையசைக்கண்ண எனவும் கொள்க. 27