சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-28433

இது முன்னர்க் கூறிய வற்றிற்குப் பொருள்பற்றி வருவது ஒரு புறனடை
கூறுகின்றது.

இ-ள்: மேல் கூறப்பட்ட இடைச்சொற்கள் ‘அவ்வச் சொல்லிற்கு அவைஅவை
பொருள்’ என நிலைபெறச் சொல்லபட்ட இயல்பை உடைய ஆயினும், வினையொடும்
பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும்
இசைநிறையாயும் திரிந்து வரினும் ஆராய்ந்து கொள்க என்றவாறு.

எனவே, கூறிய முறையான் வருதலே பெரும்பான்மை என்றும், வேறுபடவருதல்
சிறுபான்மை என்றும் சொல்லியவாறாம். ‘வினையொடும் பெயரொடும்’ என்றது அவை
வேறு பொருள என்று உணர்தற்குச் சார்பு கூறியவாறு.
ஏகார இடைச்சொல்,
 

  ‘ஏஏ இவள்ஒருத்தி பேடியோ என்றார்’

சீவக.652

என இழிபொருண்மைக்கண் வருதலும்,
 

  ‘ஏஏ இஃதொத்தன் நாணிலன்’

கலி-62

என இசைநிறை ஆதலும்,
 

  ‘ஏஏ என் சொல்லியது’

,

என அசைநிலை ஆதலும்
 
  ‘வாடா வள்ளியங் காடுஇறந் தோரே’

குறுந். 216

எனச் செய்யுள் ஈற்றின்கண்ணே இன்றி ஈற்றசை செய்யுள் இடையும் வருதலும்,
 

  ‘கடல்போல் தோன்றல் காடுஇறந் தோரே’

அகம்.1

எனச் செய்யுள் இடத்து ஈற்றில் நின்று இசைக்கும் ஏ என் இறதி கூற்றுவயின் ஓர்
அளபு ஆதலும்,

ஓகார இடைச்சொல் ‘குற்றியோ மகனோ’என ஐயப் பொருண்மைக் கண்ணும்,