சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

434 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கலக் கொண்டன கள்என்கோ
காழ்கொற்றன் சூடுஎன்கோ’

 

என எண்ணுதற்கண்ணும்,

என என்பது ‘ஊர் எனப்படுவது உறையூர்’ எனச் சிறப்பின் கண்ணும் வருதலும்,

தஞ்சக்கிளவி ‘அவர் நமக்குத் தஞ்சம் அல்லர்’ எனப் பற்று அல்லர் என வருதலும்,குரை- என்னும் இடைச்சொல் அசைநிலை ஆதலே அன்றி
 

  ‘அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே’

புறம்.5

என இசைநிறை ஆதலும்,
 
  இன்-சாரியை ஆதலே அன்றி
‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’

தொல்.சொல்.72

என அசைநிலையாதலும்,

அவ்வாறு பிறவாற்றான் திரிந்து வருவன உளவேல் அவையும் ஈண்டே
அமைத்துக் கொள்க.
 

  ‘ஏஏ இவன்ஒருத்தி பேடியோ என்றார்’

சீவக.652

என்பதனை இசைநிறை என்பாரும் உளர்; பொருள் உணர்த்தி நிற்றலின் அங்ஙனம் ஆகாமை அறிக.

செய்யுள் இன்பம் நோக்கி ‘வினையினும் பெயரினும்’ என்றார்.
 

விளக்கம்
 

உரைச்செய்தி பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. (சொல்.297)
 

  ‘ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை
ஆயிரண் டாகும் இயற்கைய என்ப’

(தொல்.சொல்.272)