சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-29437

கிளந்தவற்றையும் இன்ன என்று அறிவது வழக்கினுள் சார்பும் இடமும் குறிப்பும்
பற்றிஅன்றே? அதனால் கிளவாதவற்றையும் அவ்வாறு சார்பும் இடமும் குறிப்பும் பற்றி
இஃது அசைநிலை இஃது இசைநிறை இது குறிப்பான் இன்னபொருள் உணர்த்தும் என்று
ஆணையான் அன்றி உணர்ந்து கொள்க என்பார்.
 

  ‘கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே’
 
என்றார்.
 
  ‘குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே’

முருகு.217

எனத் தொறு- தான்சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமும் உணர்த்தி
நிற்றலும், அதுதான்.
 
  ‘நாடோறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடோறும் நாடு கெடும்’

குறள்.553

என நீண்டும் நிற்றலும், ஆ என்பது வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும்,
 
  ‘ஆஅம்மா அம்மா’

 சீவக.1804

என இரக்கம் உள்வழியும் பொருள் உணர்த்தலும்,
 
                    பொள்ளென- பொம்மென- கதுமென என்பன போல்வன விரைவும், கொம்மென- என்பது பெருக்கம் என்னும் குறிப்பும் முறையே உணர்த்தலும்,

‘ஒளஒள ஒருவன் தவம் செய்தவாறு’ என்றவழியும் ஒரு தொழில் செய்வானை ‘ஒளஒள இனிச்சாலும்’ என்ற வழியும் ஒளகாரம் பிரிவுஇல் அசையாய்ச் சொல்லுவான்
குறிப்பிற்குத்தகும் ஓசை வேறுபாட்டான் முறையே சிறப்பும் மாறுபாடும் புலப்படுத்தலும்,
 

  ‘ஒளஉ ஒருவன் இரவலர்க்கு ஈந்தவாறு’
‘ஒளஉஇனி வெகுளல்’

 
எனவும்,