சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-3459

  ‘கடுநட்பு’
 
எனச்சிறப்பும்,
 
  ‘கடிஉருமின் உரறிக் கடிப்புச் சேர்பு’
 
என அச்சமும்.
 
  ‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவன் நினக்கே’

 
எனப் புறத்து அன்றித் தெய்வம் முதலாயினவற்றின் முன் நின்று தெளிவித்தலும் ஆகிய குறிப்பொடு கூடச் சிறுபான்மை.
 
  ‘கடுத்தனள் அல்லளோ அன்னை’
 
என ஐயமாகிய குறிப்பும்,
 
  ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’
 
எனக்கரிப்பும்,
 
  ‘கடிநாறு பூந்துணர்’
 
என மணமும் ஆகிய பண்பும் உணர்த்தலும் வரலாற்று முறைமை என்று சொல்லுவர் உரிச்சொற்கள் பொருள் உணர்த்தும் முறைமையை உணர்ந்தோர் என்றவாறு.

மேல் பண்பு உணர்த்துதற்குத் தோற்றுவாய் செய்வார், கரிப்பும் மணமும் ஆகிய பண்பும் உடன் கூறினார். 3
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்.’ தொல்.சொல்.337
  ‘விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.’ 347
  ‘அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.’
348
  ‘பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.’ 339
  ‘தாவே வலிமை வருத்தமும் ஆகும்.’ 344மு.வீ.ஒ.42
  ‘செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.’ 352