சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

46 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பாலையும் தீங்கு அட்டாய் என்பதனையும் சொல் மாத்திரத்தான் அன்றிச் சொல்லொடு
கூடிய குறிப்பான் விளக்கியவாறு காண்க.
 
 ‘இளைதாக முள்மரம் கொல்க களைகுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.’

குறள். 879
 
என்னும் தொடர்மொழி, நிலைபெற்றால் களையல் உறின் கலையல் உற்றாரை அவர்தாம்
கொல்வர்; அதனால் தீயாரை அந்நிலை பெறாக்காலத்தே களைக; என்னும் பொருளை
விளக்குதலும் குறிப்பின் தோன்றுதலாம். அணி இலக்கணம் கூறுகின்றார்
இன்னோரன்னவற்றைப் பிறிது மொழிதல் என்பது ஓர் அணி என்ப.
 
 இனி, இன்ன பிறவாவன,
‘நாவலொடு பெயரியபொலம்’
‘திங்கள் விரவிய பெயரினான்’
 

முருகு.18
சீவக-671
 

என்றால் போல்வன; சாம்பூநதம், புத்திசேளன் என்பவற்றைக் குறிப்பான் விளக்கி
நிற்றலின்.

இனி வெளிப்படைச்சொல் அவன்- இவன் உவன் வந்தான்- சென்றான்- என
முறையே பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையும் சொல் மாத்திரத்தான்
விளக்கியவாறு காண்க. அடுநறா, (குறள்.1060) ‘பறவாக்குளவி’ ‘பாயாவேங்கை’ (தண்டி.)
என்றாற்போல்வனவும் அன்ன; விழியினையும் கான மல்லிகையினையும் வேங்கை
மரத்தையும் பொதுமையின் நீக்கி முறையே விளக்கி நிற்றலின். பிறவும் அன்ன.
 

விளக்கம்
 

மேல் என்றது 166 ஆம் நூற்பாவினை
                    இவ்வாசிரியர் ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என்னும் நூற்பாவினுள் நன்னூலார்
கூறியனவற்றுள் ஒன்றொழி