சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1349


 
தகுதி வினைக்குறிப்பு அன்மொழி ஆகு
பெயரே குறிப்புரை அல்லன வெளிப்படை.’

மு.வீ.பெ. 18
 

சொற்பாகுபாடு
 

171அதுவே,
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை
என இரண்டு ஆகும் இடைஉரி அடுத்து
நான்குமாம் திசைவட சொல்லணு காவழி.
 
 

இது, மேல் அவ்வாற்றான் பகுத்தசொல் இவ்வாற்றான் இத்துணை ஆம்
என்கின்றது.

இ-ள்: மேல் கூறப்பட்ட சொல்லே இயற்சொல்லும் திரிசொல்லும் ஆகிய இரண்டன்
தன்மையானே கூறுபடும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என இரண்டாம்;
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய இரண்டும் கூட, நான்கு வகைத்துமாம்;
திசைச்சொல்லும் ஆரியச்சொல்லும் கூடாத இடத்து என்றவாறு.

இங்ஙனம் கூறிய அதனால் போந்தது, பெயர்இயற்சொல் பெயர்த்திரிசொல்-
வினைஇயற்சொல்- வினைத்திரிசொல்- இடைஇயற்சொல்- இடைத்திரிசொல்-
உரிஇயற்சொல்- உரித்திரிசொல் என எண்வகைத்தாம் தமிழ் நாட்டிற்கு உரியசொல்
என்பதாம். அற்றேல் அடுத்து நான்குமாம், என்னாது, ஒன்றாக ஓத அமையும் பிறஎனின்,
பெயர்ச்சொல் பொருளை விளக்குதலானும் வினைச்சொல் பொருளது புடை பெயர்ச்சியை
விளக்குதலானும் அவற்றை முன்ஓதி, இடைச்சொல் அவ்விரண்டற்கும் விகுதி-
வேற்றுமை- உவமை- சாரியை- உருபுகள் ஆகியும் சில பெயர்வினைகள் ஆகியும்
வருதலானும், தெரிநிலை- தேற்றம் முதலிய பொருண்மை