சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

50 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்குதலானும், உரிச்சொல்லும் ஒருவாற்றான் பெயர் எனினும் பொருளை விளக்கலும்
பெரும்பான்மையும் உருபு ஏற்றலும் இன்றிச் சிலவினைபோல வரலானும் இவற்றை
அவற்றின்பின் ஓதினார் என்க.

அல்லதூஉம், இவை பெயர்வினைபோல இலக்கணம் முற்று ஒருதலையாக ஏற்றுத்
திணைபால் இடங்களை விளக்கித் தன் நடவா ஆகலானும் வேறு ஓதவேண்டும் என்பது.
‘திசைச்சொல் அணுகாவழி’ எனவே, இப்பகுதிப்படுவது தமிழ்நாடிற்கு உரிய சொல்
என்பதூஉம், அவையும் ஈண்டு அணுகப்பெறும் என்பதூஉம், அணுகுதல் ஒருதலை அன்மையின் அவற்றிற்கு இலக்கணம் ஈண்டுக்கூறார் என்பதூஉம் ஆயிற்று.
 

விளக்கம்
 

மேல் என்றது 160 ஆம் நூற்பாவினை.

இயற்சொல் திரிசொல் என்பனவற்றைப் பெயர் வினை இடை உரி என்ற
நான்கனொடும் தனித்தனியே கூட்ட சொல் வகை எட்டாகும். உரிஇயற்சொல் இன்று
என்பது சங்கரநமசிவாயர் சிவஞான முனிவர் ஆகியோர் கருத்தாகும். ‘அல்லதூஉம்,
இவை பெயர்வினைபோல.... ... ஆயிற்று என்பது நன்-269 ஆம் நூற்பா உரையுள்
மயிலைநாதர் உரைத்தனவேயாம்.

திசைச்சொல்லும் வடசொல்லும் அருகியே தமிழ் கலந்து வருவனவாதலின்,
அவற்றிற்கு இயற்சொல் சொற்கள்போல விரிவான இலக்கணம் கூறப்படவில்லை என்பது.
 

   ஒத்த நூற்பாக்கள்:
 

 ‘இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’

தொல்.சொல். 397