சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-13-1451


 
‘சொல்லெனப் படுப பெயரே வினையென்று
ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே’.
‘இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப.”’
‘எச்சொல்லும் பெயர்வினை இடைஉரி என நான்கு’
பெயர்வினை இடைஉரி எனச்சொல் நான்கே.’
‘இயற்சொல்... ... .... சொல்லே’.
 

158
159
முழுதும் நன். 270
தொ.வி. 42
மு.வீ.பெ. 3
மு.வீ.ஒ. 48

இயற்சொல்
 

172.செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தன்பொருள் விளக்கும் தன்மையது இயற்சொல்.
 
 

இது மேல் இயற்சொல் என்றதன் இலக்கணம் கூறுகின்றது.

இ-ள்: செந்தமிழ் நிலத்தின்கண்ணே வழங்கும் செவ்விய தமிழ்ச்சொல்லாய்ச்
சொல்லானும் பொருளானும் திரிபு இன்றி அச்செந்தமிழ் நிலத்தார்க்கும் ஏனைக்
கொடுந்தமிழ் நிலத்தார்க்கும் ஒப்பத் தனது பொருளினை விளக்கும் இயல்பை உடையது
இயற்சொல்லாம் என்றவாறு.

இயல்பாகிய சொல் இயற்சொல் என்க. அவை நிலம்-நீர்-தீ- வளி- சோறு- கூழ்-
பால்- மக்கள்- மரம்- தெங்கு- கமுகு என்றாற்போல்வன எனக்கொள்க. செந்தமிழ்
நிலமாவது வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும்
மருவூரின் மேற்கும் ஆம்.                                       14
 

விளக்கம்
 

மேல் என்றது 171 ஆம் நூற்பா.
                    செந்தமிழ் நிலத்தின் எல்லையை இவ்வாசிரியர் கூறிய