| ‘பால்மயக் குற்ற ஐயக் கிளவி தான்அறி பொருள்வயின் பன்மை கூறல்.’ | தொல்.சொல்.23 |
|
| ‘உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை.’ | 24 |
|
| ‘தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான’ | 25 |
|
| ‘ஐயம் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும் எய்தும் பொதுமொழியான் ஈண்டுரைக்க- மெய்திரிந்தால் அன்மை துணி பொருள்மேல் வைக்க-’ | நே.சொல்.8 |
|
| ‘ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருள்மேல் அன்மையும் விளம்புப.’ | நன்.376 |
|
| ‘ஐயம் திணைபால் அணையும் பொதுவே.’ ‘ஐயமாம் இருதிணை அகத்தும் உருபைச் செப்பினும் என்மனார் தெளிந்திசி னோரே.’ | தொ.வி.128
மு.வீ.ஒ.60 |
|
| ‘ஐயுற் றுத்துணி தரும்வழி அன்மைத் தன்மையைச் சுட்டலும் உரிய ஆகும்.’ ‘திணைதுணிந் தனபால் துணியப் படாத ஐயக் கிளவி அவ்வப் பொருள்வயின் பன்மை கூறல் என்மனார் புலவர்.’ | 61
59 |
|
திணைவழுக்காத்தல் (297,298)் |
297. | உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின. | |
இது திணைவழுக் காக்கின்றது. இ-ள்: யாதானும் ஓர் இயைபு பற்றி உயர்திணையொடு தொடர்ந்து நின்ற பொருள் முதலிய ஆறும் அவ்வியை பினான் அவ்வுயர்திணையொடு ஒன்றுபடுத்தி முடிக்குங்கால் அவ்வுயர்திணை முடிபினை உடையவாய் முடியும் என்றவாறு. |