ஆதலின், அதனையும் ஈண்டு ஒன்றென முடித்தலான் அமைத்தல் பொருந்தாமை அறிக. |
அமைதி |
‘திணைபால் பொருள்பலவிரவின’ (நன்.378) என்ற நூற்பா உரையில் ‘தானும் .........உண்டான்’ எனத்திணை விரவிச் சிறப்பினால் ஆண்பால் முடிபு ஏற்றலும் கொள்க என்று இக்கருத்தைப் பிறிதொருவாய் பாட்டால் தாம் சொற்றதை முனிவர் மறந்தார் போலும். |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘பலவயி னானும் எண்ணுத் திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.’ ‘எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையா.’
முழுதும் ‘சிறப்புஅணி நடையால் திணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணிநர் கொளலே.’
‘திணைவிர வுப்பெயர் செய்யுள் மருங்கே அஃறிணை முடிபின ஆகும் என்ப.’ | தொல்.சொல்.51 நே.சொல்.10
நன்.378
தொ.வி.129
மு.வீ.ஒ.83 |
திணைபால் வழுவமைதி |
299 | உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் சொல்நோக் கினும்திணை பால்அவை வழுக்கினும் வழுஎன வரையார் என்ப. | |
இது திணை வழுஅமைதியும் பால் வழுஅமைதியும் கூறுகின்றது. இ-ள்: ஒன்றனை உவந்து கூறுதற்கண்ணும், உயர்த்திக் கூறுதற்கண்ணும், சிறப்பித்துக் கூறுதற்கண்ணும், |