சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-5515

செறுத்துக் கூறுதற் கண்ணும், இழித்துக் கூறுதற் கண்ணும் பொருளை நோக்காது
சொல்லின் இயல்பை நோக்குதற் கண்ணும் சொல்லான் அன்றிச் சொல்லுவான்
குறிப்பொடு படுத்து வேறு வேறு உணரப்படும் திணையும் பாலுமாகிய அவ்விரண்டும்
மயங்கி வரினும் வழு என்று கடியார் அமைத் துக்கொள்வர் ஆசிரியர் என்றவாறு.
 
  எ-டு: ஒருவனை என்யானை வந்தது- போயிற்று-
‘போர்யானை வந்தீக ஈங்கு’
 
கலி.86
எனவும்,
 
  ஓர் எருத்தினை- என்தந்தை வந்தான்- போயினான்
 

 
எனவும்,
 
  ஓர் ஆவினை- எம் அன்னை வந்தாள்- போயினாள்-
‘கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர்’
 


முல்லைப். 15-16
எனவும் முறையே உயர்திணை அஃறிணையாகியும், அஃறிணை உயர்திணை ஆகியும்
ஒப்புமை கருதாது உவப்பின்கண் திணை மயங்கி வந்தன.
 
  ‘தேமலர் அங்கண் திருவே புகுதக’
 
சீவக.2121
 
என ஒப்பின்றி ஆண்பால் பெண்பாலாக உவப்பின்கண் பால் மயங்கி வந்தது.

கன்னிஞாழல்- கன்னிஎயில்- எனவும், ஓர் எருத்தை நம்பி எனவும், ஒரு கிளியை
நங்கை எனவும் அஃறிணை உயர்திணை ஆகி உயர்ச்சிக்கண் திணைமயங்கி வந்தன.

ஒருவனையும் ஒருத்தியையும் இவர் வந்தார் போயினார் எனவும், ஒருவனையும்
ஒருத்தியையும் ஒன்றனையும் நீர்வந்தீர் போயினீர் எனவும், ஒருவன்தான் ஒருத்திதான்
ஒன்றுதான் ‘யாம் வந்தேம் போயினேம்’ எனவும்,