சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

516 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘இரவின் வருவானைப் புல்லலுறும் என் மனனே தோழா,
 
எனவும்,
 
  ‘தாயாகித் தலையளிக்கும் தண்துறை ஊரகேள்’
 

(யா.கா-மேற்)
எனவும் ஒருமைப்பால் பன்மைப்பாலாகவும் பெண்பால் ஆண்பாலாகவும் ஆண்பால்
பெண்பாலாகவும் உயர்ச்சிக்கண் பால் மயங்கி வந்தன.

வழக்கின்அகத்துப் பெருங்கொற்றன்- பெருஞ்சாத்தன்- என அடைசேர்மொழி
இல்குணம் அடுத்து உயர்த்துக் கூறலும் ஈண்டே கொள்க.
 

  கண்போலச் சிறந்தானை ‘என்கண்வந்தது’ எனவும்,
உயிர் போலச் சிறந்தானை ‘என்உயிர் வந்தது’
‘ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
போல வரும்என் உயிர்’
 
கலி.81
எனவும் உயர்திணை அஃறிணையாய்ச் சிறப்பின்கண் திணை மயங்கி வந்தன.
 
  ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’
 
புறம்.186
எனவும்,
 
  ‘உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்
றப்பால்நாற் கூற்றே மருந்து’
 
குறள்.950
எனவும்,
 
  ‘தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்’
 
குறள்.69
எனவும் வருவன எல்லாம் ஈண்டே அமைத்துக் கொள்க.
 
  பொறியறை வந்தது போயிற்று எனவும்,
கெழீஇயிலி வந்தது போயிற்று எனவும்,
பொய்ச்சீத்தை வந்தது போயிற்று எனவும்