சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-5517

உயர்திணை அஃறிணையாய்ச் செறலின்கண் திணைமயங்கி வந்தன.
 
  ‘எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல்’
 

குறள்.144
எனவும்,
 
  ‘அவர் நமக்கு
அன்னையும் அத்தரும் அல்லரோ தோழி
புலவியது எவனோ அன்பிலங் கடையே’
 


குறுந்.93
எனவும் பன்மைப்பால் ஒருமைப்பாலாயும் ஆண்பால் பெண்பாலாயும் செறலின்கண் பால் மயங்கி வந்தன.
 
  ‘ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்’
 

குறள்.848
எனவும்,
 
  ‘இரவுஎதிர் கொள்ளா இருகால் பசுவே
அரிய விரதம் அடங்குதல் இல்லார்’
 

 
எனவும் உயர்திணை அஃறிணையாய் இழிப்பின்கண் திணை மயங்கி வந்தன. இழிப்பின்கண் பால் மயங்கி வந்தன வந்துழிக் காண்க.

குடிமை நன்று- ஆண்மை நன்று- இளமை போயிற்று- மூப்பு வந்தது- அடிமை நன்று- வன்மை நன்று- விருந்து வந்தது- குழு நன்று- பெண்மை நன்று- அரசு வந்தது- வேந்து வந்தது- வேள் வந்தது- குரிசில் வந்தது- அமைச்சு வந்தது- புரோசு வந்தது- மக வந்தது- குழவி வந்தது- அலி வந்தது- அழிதூ வந்தது- குருடு தீது- முடந் தீது- பெருவிறல் வந்தது- அருந்திறல் வந்தது- எனவும், உலகம் பசித்தது- உயிர் போயிற்று- உடம்பு நுணுகிற்று- யாக்கை