இந்நூற்பா திணைபால் இரண்டன் வழுவமைதி கூறுவதற்கு எழுந்ததாகும். காதல்பற்றி ஒருவனை யானைஎன்ற அஃறிணை ஒருமையாகக் கூறுதலும் ஓர் எருத்தினைத் தந்தை வந்தான் என உயர்திணை ஆண்பாலாகக் கூறுதலும், பசுவினை எம் அன்னை வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாகக் கூறுதலும், பசுக்களைத் தாயர் வருவர் எனப் பலர்பாலாகக் கூறுதலும் பால்வழுவாத திணை வழுவமைதிக்கு எடுத்துக்காட்டு. திரு என்பது திருமகளைக் குறிப்பதாகலின் ஆண் பாலைத் திரு என்று விளிப்பது பால்வழுவமைதி. இவ்வழுவமைதிகள் உவப்பின்கண் வந்தன. கன்னி என்ற உயர்திணைச்சொல் அஃறிணைப்பொருளாகிய ஞாழல்மரம், எயில் என்பனவற்றொடு வருதலும் |