சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

524 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்
பால்பிரிந்து இசையா உயர்திணை மேன’
தொல்.சொல்.57

என்பனவற்றையும் கொண்டமை உணரத்தக்கது.
 

சூறாவளி
 

வேள் குரிசில் என்பன அஃறிணை வாசகம் என ஈண்டு வழு அமைத்தார். மேல் பெயரியலுள்

‘நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில்’ என உயர்திணை ஆண்பால் பெயருள்
எடுத்தோதியதனை மறந்தார் போலும். குடிமை நல்லன்- ஆண்மை நல்லன்- என ஈறும்
திரியாது நின்றாங்கு நின்று குடிமை ஆண்மை முதலியன உயர்திணை முடிபுகொள்ளும்
எனவும். அது வழா நிலையாம் எனவும் கூறினார். ஆசிரியர் தொல்காப்பியனார்.
 

  ‘உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
அஃறிணை மருங்கின் கிளத்தாங்கு இயலும்’
சொல்.55

என்றதனால், அவை உயர்திணை முடிபு கொள்ளா என விலக் கப்பட்டமையானும்,
குடிமை நல்லன் ஆண்மை நல்லன் முதலிய வாய்பாடு இருவகை வழக்கினும்
இன்மையானும் அதுபொருந்தாது என மறுக்க.
 
  ‘நின்றாங்கு இசைத்தல் இவண்இயல்பு இன்றே’
‘இசைத்தலும் உரிய வேறிடத் தான’
58
59
 
என்னும் சூத்திரங்கட்குப் பொருள் அறியாது உரையாசிரியரை உள்ளிட்டோர் எல்லாம்.
 
  ‘அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்’ 59

என்பதனொடு மாறுகொள்ள உரைத்தார். அதுபொருத்தாமை அறிக. இவ்வாறு இன்னும் எடுத்து விரிப்பின் பெருகும். ஆங்காங்கு உய்த்து உணர்க.