இந்நூற்பாவில் வேள் குரிசில் என்பன அஃறிணை வாசகம் என்று வழுவமைத்தமை பண்டையார் கொள்கையை உட்கொண்டதாம். ‘நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில்’ என்பன உயர்திணைப் பெயர்கள் ஆதல் புதியன கோடலாகிய பின்னவர் கொள்கையை ஏற்றுச்சென்றதாம் கொள்க. குடிமை ஆண்மை முதலியன உயர்திணை முடிபும் கொள்ளும் என்றே பண்டைய உரையாசிரியர் பலரும் கூறியது பொருந்தாது என்று காரணமின்றி முனிவர் கூறும் கூற்றுப் பொருளுரை அன்று என்பது வெளிப்படை. நூற்பாக்களின் அமைப்பை நோக்கின் பண்டையார் உரையே ஏற்புடைத்து என்பது தெளிவாகும். ‘நின்றாங்கு இசைத்தல் இவண்இயல் பின்றே’
என்ற நூற்பாவில் ‘இவண்’ என்ற சொல் நிலையையும் நோக்குக. |