என்னும் பன்மையொடு முடிவதூஉம் ஈண்டு இதனானே அமைத்துக்கொள்க.இன்னும் இதனானே, நம்பிமார் வந்தார்- நங்கைமார் வந்தார்- அன்னைமார் வந்தார்- எனவும், நங்கைமீர் கேண்மின்- பாவைமீர் கேண்மின்- அன்னைமீர் கேண்மின்- எனவும் ஒருமைப் பெயர் அடுத்து நின்று மார் ஈறும் மீர் ஈறும் பன்மை உணர்த்துதலும் கொள்க. யான் எம்ஊர் புகுவன்- நீ நும்ஊர் புகுவை- என்பன போல்வன யான் புகுவன்- நீ புகுவை- என ஒருமையொடு முடிந்து நிற்ப, எம் ஊர்- நும் ஊர்- என்பன வேறுஒரு முடியாய் நிற்றலின் வழாநிலையாம். |