எ-டு: எனக்குத் தந்தான்- நினக்குத் தந்தான்- என்னுழை வந்தான்- நின்னுழை வந்தான்- எனவும், ஈங்கு வந்தான் எனவும், அவற்குக் கொடுத்தான்- அவன்கண் சென்றான்- எனவும், ஆங்குச் சென்றான் எனவும் ஈற்றான் அன்றித் தரப்படும் பொருளும் வரவுத்தொழிலும் கொடைப் பொருளும் செலவுத்தொழிலும் தன் கண்ணும் முன்நின்றான் கண்ணும் படர்க்கைக்கண்ணும் சென்று உற்றன. பொதுவிதியான் மூன்று இடத்திற்கும் வரைவின்றி ஆம் எனவும் கொள்ளவைத்தமையானே, |