சாந்துகொடு- என்பன மயங்கி வந்தன. அமரர், அரிவை வேட்டுவன்- படர்க்கையிடத்தன; ஈங்கு- தன்மை.உயர்ந்தோன் தன்னின் இழிந்தோன் ஒருவனிடம் ஒன்று பெறுதற்கண் ‘கொடு’ என்ற சொல்லை வழங்கும். எனக்குக் கொடு என்ற கருத்தில் தன்னைப் பிறன் போலக்கொண்டு ‘இவற்குச் சாந்து கொடு’ என்று தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் கொடு என் கிளவி வரும் என்றார் தொல்காப்பியனாரும். ஐயத்தால் அரவு வையமாகிய ஈங்கும் வானத்தும் செல்லாது நின்றது என்று இவர் பொருள் கொண்டுள்ளார்; ‘ஈங்கு’ என்னும் தன்மையிடத்துச் செலவு மயங்கிற்று. பிறனைக்காட்டி ‘இவற்குக்கொடு’ என்று கூறுதல் படர்க்கைச்சொல் படர்க்கைச்சொற்கொண்டு முடிந்த வழா நிலையாம். இறுதிப்பத்தி நச்சினார்க்கினியர் ‘கொடு என்கிளவி’ தொல்.சொல்.448இல் கூறிய விளக்கத்தை மறுப்பதுபோல அமைந்துள்ளது. உரை பெரும்பாலும் ‘தரவினும் வரவினும்’ முதலிய தொல்.சொல் 28, 29, 30, 446- நூற்பாக்களுக்குச் சேனாவரையர் உரைத்தவற்றை ஒட்டியதே. |