சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-8,9539

  ‘இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.’

‘இறப்பு நிகழ்வு எதிர்வாம் காலங்கள்.’
‘இறப்பு நிகழ்வு எதிர்வுஎனக் காலம் மூன்றே.’

தொல்.பொருள்.514

நே.சொல்.39
நன்.382


காலவழுவமைதி (303, 304)
 

303. முக்கா லத்தினும் ஒத்துஇயல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே.

 

இது நிகழ்காலத்துச் சொல் ஏனைக்காலங்களையும் உணர்த்தும் என வழு
அமைக்கின்றது.

இ-ள்: மூன்று காலத்தினும் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையைச்
சொல்லுவர் சான்றோர் நிகழ்காலச் சொல்லானே என்றவாறு.

நிகழ்காலச்சொல் என்றாரேனும் இறந்த காலத்தையும் எதிர்காலத்தை யும்
அகப்படுத்தி மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்கும் செய்யும் என்னும் முற்றும்
எச்சமுமே கொள்க.

மலை நிற்கும்- தீச்சுடும்- ஞாயிறு இயங்கும்- திங்கள் இயங்கும்- எனவும்,
 

  ‘வெங்கதிர்க் கனலியொடு மதிவலம் திரிதரும்
தண்கடல் வரைப்பின்’

பெரும்பாண்.17-18
எனவும் வரும். பிறவும் அன்ன.

தீச்சுடும் என்றால் பண்டும் இன்றும் மேலும் சுடும் என்பதனை ஒப்பவிளக்கியவாறு
காண்க. இதனானே ஏனை நிகழ்காலச் சொற்கள் ஏலாமை உணர்க.