சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

540 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளக்கம்
 

செய்யும் என்றும் முற்றும் பெயரெச்சமும் கொள்ளப்பட்டன. உரை சேனாவரையர்
உரையே- தொல்.சொல்.240 நன்னூல் விருத்தி நிகழ்காலத்து ஏனைய சொற்களையே
சுட்டி, நிற்கும் என்பது நிற்கும் தன்மை உடைத்து என்றாற் போல ‘இயற்கைப் பொருளை
இற்றெனக் கிளத்தல்’ என்னும் பொருளது என்கின்றது. (நன்.383)
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முன்னிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.’

முழுதும்


தொல்.சொல். 240

நன்.383, மு.வீ.வி.40
304.
 

விரைவினும் மிகவினும் இயல்பினும் தெளிவினும்
அன்னவை அல்வழி யானும்முக் காலமும்
ஏற்புழி மயங்கும் என்மனார் புலவர்.

 

இஃது எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் எனவும், இறப்பும் எதிர்வும்
நிகழ்வொடு மயங்கும் எனவும், எதிர்வு இறப்பொடும் நிகழ்வொடும் மயங்கும் எனவும்,
இறப்பும் எதிர்வும் நிகழ்வும் ஏனையவற்றொடும் தம்முள் மயங்கும் எனவும் வழு
அமைக்கின்றது.

இ-ள்: விரைவுப் பொருண்மையை உடைய வினைச் சொற்கண்ணும், இருவினைகள்
பலவற்றுள்ளும் சிறந்த இரு வினைக் கண்ணவாகிய தவம் செய்தல்- தாயைக்கோறல்-
முதலிய வினைச் சொல்லை நோக்கி அம்மிக்கதனது திரிபு இன்றிப் பயக்கும் பண்பைக்
குறித்து வரும் சுவர்க்கம் புகுதல்- நிரயம் புகுதல்- முதலிய வினைமுதல் வினைச்
சொற்கண்ணும், வழங்கலாற்றான் இஃது இப்பெற்றித்து என அப்பெற்றியான் ஒருதலையாக
அறிந்திருந்த இயல்பு பொருண்மைக்கண்ணே நிகழும் வினைச்சொற்கண்ணும்,