சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-10,11545

  ‘விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
பிறழவும் பெறூஉம்முக் காலமும் ஏற்புழி.’

‘நிகழ்வினும் எதிர்வினும் வரும்வினைக் கிளவி
இறப்பினும் உரைப்பர் விரைவின் பொருள.’

‘குறித்துப் போதரும் வினைமுதல் இல்லாக்
காலை வினைமுதல் நிகழ்விற் செல்லும்.’
‘எதிர்விற் குரிய வினைச்சொற் கிளவி
தெளிவும் இயற்கையும் செப்புங் காலை
இறப்பினும் நிகழ்வினும் இயம்பப் படுமே.’
‘இறப்பும் எதிர்வும் மயங்கியும் இயலும்.’
‘நிகழ்வும் அவற்றொடு நிலவுதல் வரையார்.’

நன்.384


மு.வீ.வி.41


42


45
46
47


அறுவகை வினா
 

305. அறியல் உறவுவெளிப் படுப்பது வினாஅஃது
அறியாமை ஐயம் அறிவு கொடைகொளல்
ஏவலின் வரூஉம் இவ்விரு மூன்றனுள்
கடைநிலை நான்கும் முதல்நிலை அனைய.

 

இது ‘வழாஅல் ஓம்பல்’ என மேற்கூறிப் போந்த வினாவாவது இன்னது
என்பதூஉம், இத்துணைத்து என்பதூஉம், அதன் வழுவமைதியும் உணர்த்துகின்றது.

இ-ள்: அறியலுறவு வெளிப்படுப்பதாகிய சொல் வினா என்பதாம். அதுதான்
அறியாமையும் ஐயமும் அறிபொருளும் கொடுத்தலும் கொள்ளுதலும் ஏவலும் ஆகிய
இவற்றின் கண் வெளிப்படும். இவ்வறுவகை வினாவுள்ளும் இறுதிக் கண் நின்ற நான்கும்
முதற்கண் நின்ற இரண்டனோடு ஒக்கும் என்றவாறு.

அறியான் வினா-உயிர் எத்தன்மைத்து என வினாவுவது. ஒருபுடையானும்
அறியப்படாத பொருள் வினாவப்படாமையின் பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்பு
வகையான் அறியப்படாமை நோக்கி ‘அறியான் வினா’ ஆயிற்று.