நேமிநாத ஆசிரியர் விடைவகை எதிர்வினா- உற்றது உரைத்தல்- ஏவல்- உறுவது கூறல்- மறுத்தல் - உடன்படுதல்- என்ற ஆறாகக் குறிப்பிட்டார். நன்னூலார் விடைவகை சுட்டு- மறை- நேர்- ஏவல்- வினாதல்- உற்றது உரைத்தல்- உறுவது கூறல்- இனமொழி- என்ற எட்டு என்றார். |
ஒத்த நூற்பாக்கள்
|
| ‘வினாவும் செப்பே வினாஎதிர் வரினே.’ ‘செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான.’
‘ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும் ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும்- பேதாய் மறுத்தல் உடன்படுதல் அன்றெனினும் மன்ற இறுத்தலே போலும் இவை.’
‘சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் உற்ற துரைத்தல் உறுவது கூறல் இனமொழி எனும்எண் இறையுள் இறுதி நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப.’ | தொல்.சொல்.14
தொல்.சொல்.15
நே.சொல்.7
நன்.386 |
செப்பு, வினா- வழுக்காத்தல்
|
309. | செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே. | |
இது செப்பு வழாநிலைக்கண்ணும் வினா வழாநிலைக்கண்ணும் பொருள் ஆராய்ச்சி உள்வழி வழுவற்க என்கிறது. இ-ள்: செப்பு வழாநிலைக் கண்ணும் வினா வழாநிலைக் கண்ணும் சினைக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் உறழ் பொருளும் துணைப் பொருளும் அவ்வப் பொருளுக்கு அவ்வப் பொருளேயாம் என்றவாறு. |